ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.
* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது!
* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் விரோதமாகப் பிளவுபடுமேயானால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.
* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.
* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.
* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.
- பைபிள் பொன்மொழிகள்